×

சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உள்பட 6 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம்: சுதந்திரதின விழாவில் முதல்வர் வழங்குகிறார்

சென்னை: 2023ம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உள்பட 6 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது ‘சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும்’ என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பகிறது.

வெ.பத்ரிநாராயணன், காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம். டோங்கரே பிரவின் உமேஷ், காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம் மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம். சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம். ரா.குமார், முதல் நிலை காவலர்- 1380, நாமக்கல் மாவட்டம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும். போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சீரிய பணியாற்றிய தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கர்க்குக்கு ‘சிறப்பு பதக்கம்’ தனி நேர்வாக வழங்கப்படுகிறது.

அஸ்ரா கர்க், தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023ல் 1,843 நபர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது. வெ.பத்ரிநாராயணன், காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளினால், போதை பொருட்கள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் எடுத்துள்ளார். இம்மாவட்டத்தில் இவருடைய தீவிர முயற்சிகளின் காரணமாக 128 கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், புதிய தலைமுறை செயற்கை போதை பொருட்கள், கஞ்சா சாக்லெட் கைப்பற்றப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும், போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கஞ்சா வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை ஈடுபடுத்தியதின் விளைவாக, கோவை மாவட்டத்திலுள்ள 108 கிராம பஞ்சாயத்துகள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது.

டோங்கரே பிரவின் உமேஷ், காவல் கண்காணிப்பாளர் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, கரூரில் சிறப்பு சோதனை மூலம் நன்கு வளர்ந்த சுமார் 2,790 கிலோ எடையுள்ள 3,584 கஞ்சா செடிகளை கண்டுபிடித்து அழித்துள்ளார். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 10 வணிக வழக்குகளும் அடங்கும். 540 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அதில் 69 குற்றவாளிகள் ‘போதைப் பொருள் குற்றவாளிகள்’ என்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2,266.9 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

98 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 345 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மா.குணசேகரன் காவல் துணை கண்காணிப்பாளர் சேலம் தலைமையில் தனிப்படை அமைத்து ரயில் வண்டிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் ‘கஞ்சா வேட்டை 2.0’ மற்றும் ‘கஞ்சா வேட்டை 3.0’யின்போது கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட பல குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு 1119 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 77 குற்றவாளிகளை கைதுசெய்து 131 வழக்குகள் பதிவு செய்து உள்ளார்

சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம் மற்றும் ரா.குமார், முதல் நிலை காவலர் 1,380, புதுச்சத்திரம் காவல் நிலையம், நாமக்கல் மாவட்டம் ஆகிய இருவரும் காவல் கண்காணிப்பாளர், நாமக்கல் மாவட்டம் காவல் துணை கண்காணிப்பாளர், நாமக்கல் உட்கோட்டம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண அதிக முயற்சி எடுத்து தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஆதாரங்களை சேகரித்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களுக்கு பயணம் செய்தும் ஆதாரங்களை திரட்டி அவர்களிடமிருந்து குட்கா பறிமுதல் செய்ய உதவியாக இருந்துள்ளார்கள்.

The post சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உள்பட 6 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம்: சுதந்திரதின விழாவில் முதல்வர் வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : International Anti-Narcotics and Anti-Trafficking Day ,South Zone IG ,Asra Garg ,Independence Day ,Chennai ,Chief Minister ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவரை 7 கி.மீ தூரம்...